
தமிழக வெற்றி கழகம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா அவர்களின் முன்னிலையில், தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பாக உறையூர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்பனா தலைமையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ரொட்டி ,முட்டை, பால் ,சுண்டல், தர்பூசணி, வாழைப்பழம் ,நோட்டு, புத்தகம், பென்சில் ,பேனா வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி செங்குளத்தான் ,அபிராமி சுந்தரி ,பாக்யலட்சுமி ,நிவேதா ,கிருத்திகா ,சரஸ்வதி ,பிரேமலதா ,ஹேமலதா ,ஷோபனா ,மகாலட்சுமி, வைஜெயந்தி கலந்து கொண்டனர்.