
திருச்சி லால்குடி பகுதியில் உள்ள நகர் கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் என்பவர் அப்பகுதி மக்களிடம் கடந்த சில ஆண்டுகளாக *மலர்ந்த ரோசா என்கிற M.R. Groups* என்ற பெயரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் உள்ளதாகவும் அதை ஜான் பால் என்கிற A.R.பாலு என்பவர் நிர்வாகம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் சிலவற்றில் சிக்கல் இருப்பதாகவும், அதை திருச்சி வரனேரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அம்ருதீன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று விரைவில் தீர்ப்பு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் சுமார் 200 மேற்பட்ட அப்பாவி கிராம மக்களிடம் வழக்கறிஞர் அம்ருதீன், விக்னேஷ், இப்ராஹிம் மற்றும் ஏ ஆர் பாலு ஆகியோர் கூட்டாக சேர்ந்து M.R. Groups சொந்தமான நிலங்களில் முதலீடு செய்தால் சில மாதங்களில் பல மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி போலி ஆவணங்களை காண்பித்து பல கோடி வசூல் செய்துள்ளனர்.

இந்நிலையில் M.R. Groups நிறுவனத்தில்முதலீடு செய்த பணம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி சங்க ஹோட்டலில் வைத்து திருப்பித் தருவதாக அறிவித்து கிராம மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி

இருந்தும் கடைசி நேரத்தில் பணத்தை திருப்பி தராமல் வழக்கறிஞர் அம்ருதீன் மற்றும் ஜான் பால் என்கிற A.R.பாலு தலைமறைவாகியதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் செய்வதறியாமல் திகைத்துப் போய் உள்ளனர்.இது தொடர்பாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐ.பி.எஸ். அவர்கள் விரிவான விசாரணை செய்து அதிரடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்..!!!
